ஆரணியில் அதிமுக-வின் குடிமராமத்து பணிகளால் நிரம்பிய ஏரி, குளங்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணியினால், ஏரிகள் நிரம்பி ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளில், முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சீறிய முயற்சியால் குடிமராமத்து பணிகள் மூலம் தூர் வாரும் பணிகள் நடைபெற்றன.

அதன் விளைவாக, தற்போது பெய்து வரும் தொடர் மழையால் குன்னத்தூர் ஏரி, மேல் நகர் ஏரி, புங்கம்பாடி ஏரி, காமக்கூர் ஏரி, உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் தற்போது முழுமையாக நிரம்பியுள்ளது.

இதையடுத்து, உபரிநீர் கால்வாய் வழியாக விளை நிலங்களுக்கும் செல்வதால் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மேலும், வெள்ள நீரில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மகிழ்ச்சியாக நீராடி வருகின்றனர்.

 

Exit mobile version