“அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”

அரக்கோணம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை பெற்றுத்தரப்படும் என, வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர் கூறியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கவுதம் நகரில், கடந்த 7ஆம் தேதி, இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில், இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர். காயமடைந்த மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக, வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு வன்கொடுமை சட்ட விதிகளின்படி, நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கொலையில் தொடர்புடைய சுரேந்திரன், அஜீத், மதன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ள அவர், மற்றவர்களையும் கைது செய்ய தனிப்படை தீவிர தேடுதல் நடத்தி வருவதாக கூறியுள்ளார். காவல்துறை நேர்மையாகவும், நடுநிலையாகவும் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Exit mobile version