சர்க்கார் திரைப்பட விவகாரம்: தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் அரசு மற்றும் அரசின் திட்டங்களை இழிவுபடுத்தும் விதமாகவும், அரசின் இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்தும் விதமாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக தேவராஜ் என்பவர், மாநகர காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில புகார் ஒன்றை அளித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் மீது ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், சென்னை மத்திய குற்றபிரிவு போலீஸ், ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் அவரது வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Exit mobile version