மக்கள் நீதி மய்யம் கட்சியில் 575 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக 575 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 575 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கட்சித்தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தின் வளர்ச்சிக்காவும், தமிழர்களின் ஏற்றத்திற்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

கட்சியினருக்கு வழங்கப்பட்ட பொறுப்பை, மக்கள் நலனை முன்னெடுப்பதற்கான அரிய வாய்ப்பாக பயன்படுத்தி செயலாற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version