திருவாரூர் இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் இன்று 2வது நாளாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது

திருவாரூர் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று இரண்டாவது நாளாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. ஜனவரி 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மனுக்களை திரும்பப் பெறக் கடைசி நாள் ஜனவரி 14 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிமுக சார்பில், இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பம் விநியோகம் நேற்று தொடங்கியது. விண்ணப்ப கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, இன்று மாலைக்குள் திரும்ப வழங்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. பெறப்படும் விண்ணப்பங்கள் வரும் நாளை பரிசீலக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version