மருத்துவத் துறையில் நவீன தொழில் நுட்பங்கள் பயன்பாடு: மின் ஆளுமை முகமை ஆணையர்

மருத்துவத் துறையில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமாக, நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சையை வழங்க முடியும் என தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்த 2 நாள் கருத்தரங்கு, சென்னை ஐஐடியில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நோயாளிகளுக்கு, மேம்பட்ட, தரமான சிகிச்சைகளை தருவதை நோக்கமாகக் கொண்டு, நடத்தப்பட்ட இந்த சிறப்பு கருத்தரங்கில், பல்வேறு முன்னணி மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்கள், பல்துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா கலந்துக்கொண்டு பேசினார்.

Exit mobile version