29ஆம் நாளான இன்று ஆரஞ்சு நிற பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் உற்சவத்தின் 29ஆம் நாளான இன்று, ஆரஞ்சு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம், 28 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இதுவரை 41லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். 29ஆம் நாளான இன்று, அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை அதிகரித்துள்ளது. 3 கிலோ மீட்டர் தூரம் வரை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version