அரியானாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து

அரியானாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை  தீயணைப்பு வீரர்கள்  மீட்டனர். குருகிராமின் உல்லவாஸ் பகுதியில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது. இடிபாடுகளில் பலர்  சிக்கியுள்ள நிலையில், 5 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இடிபாடுகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. காசியாபாத் மற்றும் துவாரகாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

Exit mobile version