சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஏ.பி.சஹி

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்க இருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி ராஜினாமா செய்ததை அடுத்து, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சஹியை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக, ஏ.பி. சஹி இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார். காலை 9:20 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

Exit mobile version