நடிகை பானுப்ரியா மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு

சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக, நடிகை பானுப்ரியா மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நடிகை பானுப்ரியா தனது வீட்டில் ஆந்திராவை சேர்ந்த ஒரு சிறுமியை பணிக்கு வைத்திருந்தார்.

இந்தநிலையில் அந்த சிறுமியின் தாயார், தனது மகளை நடிகை பானுப்ரியா கொடுமை செய்ததாக ஆந்திர மாநிலம் சாமரலக்கோட்டா காவல்நிலையத்தில், புகார் அளித்திருந்தார். தனது மகளுக்கு நடிகை பானுப்ரியா, முறையாக சம்பளம் தரவில்லை என்றும் பானுப்பிரியாவின் சகோதரர் தனது தனது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பானுப்பிரியா மீது ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக இவ்விகாரம் தொடர்பாக பேசிய நடிகை பானுப்ரியா, தனது வீட்டில் இருந்து நகை, பணம், செல்போன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட பொருட்களை அந்த சிறுமி திருடி விட்டதாகவும், அதை திருப்பி கேட்டதால் பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

Exit mobile version