அன்சருல்லா அமைப்பினரை புழல் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நாசவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் இருந்த அன்சருல்லா அமைப்பினர்16 பேரும் விசாரணை முடிந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 14 பேர் மற்றும் அவர்களுக்கு நிதி திரட்டிய 2 பேர் என 16 பேரை என்.ஐ. ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் 16 பேரையும் தமிழக காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
எட்டு நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் அவர்கள் அனைவரும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் 16 பேரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். எட்டு நாள்கள் விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version