மற்றொரு பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்பு

ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள், மற்றொரு பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் பிரியங்கா என்ற கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஷம்சாபாத் அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐதராபாத் காவல்துறை இணை ஆணையர் பிரகாஷ் ரெட்டி, இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து முதற்கட்ட விசாரணையில் தெரியவரும் என தெரிவித்தார்.

Exit mobile version