டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் கைது

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் திருநெல்வேலியை சேர்ந்த சுயம்புராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார்.  டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேகடு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் சுயம்புராஜன் 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் இருப்பது தெரியவந்தது. இவரிடம் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version