இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் பிசிசிஐ-யின் புதிய தலைவர் கங்குலி தலைமையில்  இன்று கூடுகிறது. 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலியின் தலைமையில், ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. இதில், மாநில சங்கத்தில் பதவியில் இருந்தாலும் கிரிக்கெட் வாரியத்திலேயே தொடர்ந்து 6 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் வகையில் விதிமுறையை திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு 4-ல் 3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவும், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலும் அவசியம்.

இதுதவிர, கிரிக்கெட் வாரிய செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, போட்டித் தொடர், பெண்கள் அணியின் தேர்வு, கிரிக்கெட் திறமை, மண்டல, நடுவர்கள் ஆகிய குழுக்களுக்கு, நிர்வாகிகளை நியமிப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version