புனித அந்தோணியர் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் அதிகளவில் கலந்துகொள்வர். இந்தாண்டுக்கான திருவிழா மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் குடிநீர், தற்காலிக கூடாரங்கள், மின்சார வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக இலங்கை கடற்படை தேவாலய நிர்வாகத்திற்கு முழு உதவிகளையும் செய்து வருகிறது. சென்ற வருடம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்த நிலையில் இந்த வருடம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version