சென்னையில் நடைபெற்ற கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு

இந்தியாவில் 12 பில்லியன் பார்வையற்றோர் உள்ளதாகவும், அவர்களில் 55 சதவீதம் பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகர்வால் கண் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து 20 பிரபல நிபுணர்கள் மற்றும் 4000க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் கலந்து கொண்டுள்ளனர். கண் அறுவை சிகிச்சையில் சாதனை புரிந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

Exit mobile version