திருப்பதி சீனிவாச மங்காபுரத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா

திருப்பதி அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மலையப்ப சுவாமி, யோக நரசிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.

ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சின்ன சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், அம்ச வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரமோற்சவ விழாவின் மூன்றாம் நாளில், மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள், நாதஸ்வர இசை எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன், கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

Exit mobile version