அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் வரும் 12ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் 12ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கழக செய்தி தொடர்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.