சென்னையில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைத்து, 24 மணி நேர அவசர உதவி தொலைபேசி எண்களை வழங்கியுள்ளது.

பாம்பன், கடலூர் இடையே ‘கஜா’ புயல் இன்றிரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்க உள்ளது. இந்த நேரத்தில் காற்று பலமாக வீசும் என்றும் மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மழை குறித்த புகார்களைத் தெரிவிக்க சென்னை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, அவசர உதவி எண்களை வழங்கியுள்ளது.

தொலைபேசி எண்கள் 044-25384510, 044-25384520, 044-25384530, 044-25384540, 044-25619206, 044-25619511 என்ற எண்களிலும் வாட்ஸ் அப் எண்- 9445477205 என்ற எண்களிலும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

Exit mobile version