நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளை அறிவிப்பு?

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாராகி வரும் அரசியல் கட்சிகள், கூட்டணி அமைப்பது, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. 2014ல் மக்களவை தேர்தல் மார்ச் 5ல் அறிவிக்கப்பட்டு, 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version