பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்து இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிளஸ் 2 தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகிய நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான அறிவிப்பு குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் என்றும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் உயர்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை போன்றே ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கலந்தாய்வுக்கானஅறிவிப்பை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இன்று பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version