ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்: எஸ்.பி. வேலுமணி உறுதி

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதியளித்துள்ளார்.

பொள்ளாச்சி அடுத்த கம்பாலப்பட்டியில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில், 2 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில், கம்பாலப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அமைச்சர் எஸ்.பி, வேலுமணி அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்து வருவதாகவும், அந்தக் குழு ஆய்வறிக்கை தாக்கல் செய்த பின்னர் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார். நீண்ட நாள் கனவான அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை செயல்படுத்துவது போல், ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Exit mobile version