அண்ணாமலையார் கோவில் சித்திரை பௌர்ணமி விழா

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தமிழகத்தில் பல்வேறு சிறப்பை பெற்ற அண்ணாமலையார் சிவன் கோயிலில் ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சித்ர பவுர்ணமி விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபட்டனர். விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 600 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version