கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது..

ரஜேந்திர சோழ மன்னனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெறும். அதன் படி இந்த ஆண்டு அன்னாபிஷேக நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆட்சியர் ரத்னா, காஞ்சி சங்கர மடம் விஜேயேந்திரர் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அபிஷேகம் செய்யப்பட்ட சாதங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவையோட்டி கோவிலை சுற்றி 300க்கும் மேற்ப்பட்ட காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version