அண்ணா பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைகழகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

அண்ணா பல்கலைகழக தேர்வுகளுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு பருவத்தில் தோல்வியுற்றவர்கள் அடுத்து வரக்கூடிய பருவத்தில் தேர்வுகளை எழுத முடியாது. அடுத்த ஆண்டு தான் தோல்வியுற்ற தேர்வை எழுத முடியும். பல்கலைகழகத்தின் இத்தகைய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த கோரியும் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழக வாயிலில் பொறியியல் மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லையிலும் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் போராட்டத்தையடுத்து பெருமாள்புரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Exit mobile version