அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஆன்-லைன் பொறியியல் கலந்தாய்வில் மாணவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளில் சரிவர இடம் கிடைக்காது என்ற புகார் எழுந்தது. இந்த நிலையில், நான்கு கட்ட கலந்தாய்வு முடிவில் இதுவரை 75 சதவீதம் மாணவர்களுக்கு அவர்கள் விருப்ப பட்டியலில் கொடுத்த முதல் மூன்று கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 20 சதவீதம் பேருக்கு   அவர்கள் கொடுத்த விருப்பப் பட்டியலில்   மூன்றிலிருந்து பத்து வரையில் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  5% பேருக்கு மட்டுமே அவர்கள் விருப்பப் பட்டியலில் கொடுத்த முதல் 10 கல்லூரிகள் கிடைக்காமல் அதற்கு மேற்பட்ட கல்லூரிகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exit mobile version