பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைகழகம் அறிவுறுத்தல்

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்களின் உண்மை சான்றிதழை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பொறியியல் கல்லூரிகள் ஆசிரியர்களின் உண்மை சான்றிதழ்களை தன்வசம் வைத்துக் கொள்வது தொடர்பாக அண்ணா பல்கலைகழகத்துக்கு உயர்நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ்களை, சரிபார்ப்புக்கு பிறகு திருப்பி அளிக்க வேண்டும் என்று பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதை கடைபிடிக்கா விட்டால் பல்கலைக் கழக நிர்வாகம் இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகும் என்று சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு 17-ம் தேதிக்குள் கல்லூரி நிர்வாகங்கள் பதிலளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version