பட்டுக்கோட்டையில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் முழுஉருவ சிலைகள் திறப்பு

மறைந்த முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் முழுஉருவ சிலைகளை அதிமுக துணை ஒருங்கினைப்பாளர் வைத்திலிங்கம், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் திறந்து வைத்தனர்.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 79 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவைத்த வைத்திலிங்கம், 12 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

Exit mobile version