பேரறிஞர் அண்ணா நினைவுநாள் : இடைக்கால பொதுச்செயலாளர் மரியாதை செலுத்தவுள்ளார்!

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி காலை10 மணியளவில் கழக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி செலுத்த உள்ளார். இந்த நிகழ்வில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிப்ரவரி 3 ஆம்தேதி பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலை மற்றும் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டும் என தலைமைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version