தை வெள்ளியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு பூஜை

மதுரை மாவட்டம் சிம்மக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தை வெள்ளியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சிம்மக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள மஹாலட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசிக்க, அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version