ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு – மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசுகிறார்.

கடந்த மக்களவை தேர்தலின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்தது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் அக்கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறி பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். இந்த முயற்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தநிலையில், இன்று சென்னை வரும் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

Exit mobile version