ஆந்திராவுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்

கஜா புயலால், ஆந்திராவுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டு உள்ளது.

கஜா புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் 100 கிமீ வரை பலத்த காற்று, கனமழை பெய்யக் கூடும் என எச்சரித்திருந்தது. இந்தநிலையில், ஆந்திராவுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.

Exit mobile version