யானையை பரிசோதனை செய்யும்போது பாகனை மிதித்து கொன்றதால் பரபரப்பு

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை தாக்கியதில் பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை கள்ளழகர் கோயில் யானையாக வளர்ந்து வந்த ஆண்டாள் யானை வயது முதிர்வு காரணமாக கடந்த 2009ம் ஆண்டு முதல் குரும்பப்பட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, கால்நடை மருத்துவர் பிரகாஷ், பாகன் காளியப்பன் ஆகியோர் யானையை பரிசோதனை செய்ய முயற்சி செய்தனர். இதனால் ஆவேசமடைந்த யானை, பாகன் காளியப்பனை மிதித்தது. இதில் பாகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Exit mobile version