மற்றவர்கள் உதவியில்லாமல் ஜனநாயக கடமையாற்ற வந்த மாற்றுத்திறனாளி

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர் அரசு இலவச வாகனத்தில் 8 கிலோ மீட்டர் தூரம் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள குருக்கபுரம் வெற்றி நகரில் வசிப்பவர் சிங்காரம். இவர் நீண்ட நாட்களாக தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் தனது ஜனநாயக கடமை ஆற்ற யாருடைய உதவியும் இல்லாமல், 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு அரசு அளித்த வாகனத்தின் மூலம் வந்து வாக்களித்தார். இது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.

Exit mobile version