திமுகவினர் மட்டுமே ஸ்டாலினை வருங்கால முதல்வர் என்று கூற முடியும் -அன்புமணி ராமதாஸ்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு  பகுதியில்  அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகத்திற்கு ஆதரவு கேட்டு அமைச்சர்கள் சி.வி சண்முகம், வீரமணி மற்றும் பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் சொன்ன பொய்யை தமிழக மக்கள்  நம்பியதாகவும், ஆனால் உண்மையை நம்பவில்லை என்று கூறினார். காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்தில் பாலாறு  வழியாகக் தண்ணீர் கொண்டு வர மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், இது நிறைவேறும் பட்சத்தில் வேலூர் மாவட்டத்தில் வறட்சி நீங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   மத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்த அன்புமணி ராமதாஸ், திமுக எம்.பிக்களால் மக்களுக்கு எந்த நல்ல திட்டத்தையும் கொண்டு வர முடியாது என்றும், ஸ்டாலினால் எப்போதும் முதல்வராக முடியாது என்றும் விமர்சனம் செய்தார்.

Exit mobile version