மக்கள் பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது – உயர்க் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் 

மக்கள் பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக, உயர்க் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.  தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் அதிமுக அரசை கவிழ்க்க, பலர் சதித் திட்டம் தீட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.

அவர்களின் சூழ்ச்சி நிறைவேறாததால், உண்மைக்கு முரணான குற்றச்சாட்டுக்களைப் பரப்பி வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நலத்திட்டங்களை அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும், எந்த சூழலிலும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்காது என்றும் உறுதியளித்தார்.

முன்னதாக, அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை அமைச்சர் அன்பழகன் தொடக்கி வைத்தார்.

 

 

Exit mobile version