மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  இளம் வயதிலேயே சமூக பணியாற்றும் நோக்கில் அரசியலுக்கு வந்தவர் அனந்தகுமார் என்று கூறியுள்ளார்.

பெங்களூரு தெற்கு தொகுதியில் இருந்து 1996 முதல் 2014 வரை என ஆறு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் என்று முதலமைச்சர் புகழாரம் சூட்டி உள்ளார்.

அனந்தகுமாரின் இரங்கல் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், அனந்தகுமாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

 

Exit mobile version