மருத்துவமனையில் ஆய்வாளர் ஸ்ரீதர் அனுமதி!

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தை-மகன் மரண வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீதரை காவல்துறையினர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Exit mobile version