சோழிங்கநல்லூரில் 473 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சென்னை சோழிங்கநல்லூரில் 473 தனியார் பள்ளி வாகனங்களை சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இதன் ஒரு பகுதியாக சென்னை சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்த ஆய்வில் 77 தனியார் பள்ளிகளை சேர்ந்த 473 வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Exit mobile version