வேலூரில் வட மாநில கடை உரிமையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் இணைந்து 6க்கும் மேற்பட்ட கடைகளை கடந்த 27 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.

இவர்களின் கடைக்கு வந்த 100க்கும் மேற்பட்ட வணிகர்கள், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளதாக கூறி, பிரகாஷ் என்பவர் நடத்தி வரும் கடையை மூட வேண்டுமென கடையின் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வாணியம்பாடி வணிகர் சங்க தலைவர் ஸ்ரீதர் நான்கு பேருடன் வந்து ஊழியர்களை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஸ்ரீதர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version