புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பு

மக்களவை தேர்தலை சீர்குலைக்க புல்வாமா தாக்குதல் போன்று மற்றுமொரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய மோட்டார் சைக்கிளை மோதி வெடிக்க வைத்தனர். இதில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தி அழித்தது. தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலை சீர்குலைக்கும் எண்ணத்தில் அதேபோல் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Exit mobile version