சூலூர்,அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம்

அரவக்குறிச்சி, சூலூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை தேர்தல் ஆணையம் நியமனம் செய்து அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 18 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரவக்குறிச்சி, சூலூர் இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக மீனாட்சி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஈஸ்வரன், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக பாலகிருஷ்ணனும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஜெயராஜ், மீனாகுமாரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி மற்றும் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் 29 ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Exit mobile version