சுப்பிரமணியசாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி கிடைத்துள்ளதாக தகவல்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 59 லட்சம் ரூபாய் பணம், ஆயிரத்து 600 கிராம் தங்கம் கிடைத்துள்ளதுள்ளது

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பலேவேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் ஏப்ரல் மாதத்தில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில், பணியாளர்கள் மற்றும் சிவகாசி உளவாரப் பணிக் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது பக்தர்களின் காணிக்கையாக, ஒரு கோடியே 59 லட்சம் ரூபாய் பணம், ஆயிரத்து 600 கிராம் தங்கம், 13 ஆயிரத்து 510 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு டாலர்கள் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version