10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் எண்ணங்களின் படியே தமிழக அரசு செயல்படும் என்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை கூறினார்.

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அனைவரும் ஒன்று சேர்ந்து நல்ல முடிவினை எடுப்போம் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version