மீன் பிடிக்க வெடி வைத்த போது ஏற்பட்ட விபரீதம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள வைகை ஆற்றில் மீன்பிடிக்க வெடி வைத்த போது எதிர்பாரத விதமாக கையில் வெடித்ததில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் மீனாங்கன்னிப்பட்டியைச் சேர்த்தவர் துறையன். திருப்பூரில் வசித்து வரும் இவர் மீனாங்கன்னிப்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை பராமரிப்பு செய்வதற்காக திருப்பூரிலிருந்து வந்துள்ளார். அப்போது கிராமத்தினர் 4 பேருடன் வைகை ஆற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். மீன்கள் நீரில் ஆங்காங்கே பதுங்கி நிற்கும் என்பதால் தண்ணீரில் வெடி வைத்து மீன் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக வெடி வெடித்து துறையனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் துறையன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version