பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் ஏற்பட்ட விபத்து

திருப்பதி அருகே கார் ஓட்டி பழகும் போது பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த புதுமணத் தம்பதியினர் பலியாகினர்.

திருப்பதியை அடுத்த சந்திரகிரியை சேர்ந்த காவியா, பாலு இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் ஆன நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். திருப்பதியை சேர்ந்த ராஜு என்பவர் தனது நண்பர்களுடன் காரை ஓட்டி பழக வந்த போது, பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்ததால் விபத்து ஏற்பட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Exit mobile version