அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட உள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. 90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 85 புள்ளி 63 அடியை எட்டி உள்ளது. ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சில நாட்களில் முழுக் கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான வேறிடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version