விதிமுறைகளை மீறி விளம்பர பலகைகள் வைத்ததாக அமமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு

டிடிவி தினகரனை வரவேற்று போக்குவரத்திற்கு இடையூறாக விளம்பர பலகைகள் வைத்ததாக அமமுக பொதுக்குழு உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் வழியாக சென்ற டிடிவி தினகரனை வரவேற்கும் விதமாக அமமுக பொதுக்குழு உறுப்பினர் சந்தோஷ்குமார் என்பவர் கிருஷ்ணன்கோவில் பகுதியில் விளம்பர பலகைகள் வைத்துள்ளார். அனுமதியின்றியும், போக்குவரத்திற்கு இடையூறாகவும், விதி முறைகளை மீறியும் விளம்பர பலகைகள் வைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அமமுக பொதுக்குழு உறுப்பினர் சந்தோஷ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version