மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

சென்னையில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இணைப்புச் சாலையில் மக்கள் திரண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வேகமெடுத்துவரும் ஒமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையின் கடற்கரைகளில் இன்றுமுதல் மறு உத்தரவு வரும்வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி கடற்கரைக்கு மக்கள் சென்று வருவதோடு, இணைப்புச் சாலைகளில் கூட்டமாக நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடற்கரையில் திரளும் மக்கள், அரசு நிகழ்ச்சிகளில் மட்டும் கூட்டங்கள் அனுமதிக்கப்படுவதாகவும், தங்களை காவல்துறையினர் வெளியேற்றுவதாகவும் குற்றம் சாட்டினர்.

Exit mobile version