பறிமுதல் பணத்தை போலீஸிடமிருந்து பறிக்க முயன்ற அமமுகவினர் : ஆண்டிபட்டியில் துப்பாக்கிச் சூடு

பறிமுதல் பணத்தை போலீஸிடமிருந்து பறிக்க முயன்ற அமமுகவினர் : ஆண்டிபட்டியில் துப்பாக்கிச் சூடு தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த பணத்தை அதிகாரிகளிடம் இருந்து அமமுகவினர் பறிக்க முயன்றதால், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்தில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்திற்கு காவல்துறையினருடன் சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் கட்டு கட்டாக இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அமமுக தொண்டர்கள், பறிமுதல் செய்த பணத்தை எடுத்து செல்ல விடாமல் தடுத்து, பணத்தை பறிக்க முயன்றனர். இதனையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, காவல்துறையினர் வானத்தை நோக்கி 4 முறை சுட்டனர். மேலும் இது தொடர்பாக 4 அமமுகவினரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version